எல்லோராலும் அறியப்பட்ட வை.எல்.எம் ஸவாஹிர் சேர் பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் பின்னர் அதே பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி தனது சமூகப் பணியை துவங்கினார். தொடர்ந்து இலங்கை வெளிநாட்டு சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு அதில் பல்வேறு உயர் பதவிகளை அடைந்து பங்லாதேஷ் மற்றும் ஈரான் என பல்வேறு நாடுகளில் இலங்கை உயர் இஸ்தானிகராக பணியாற்றினார்.
மிகவும் சாதாரனமாக எல்லேருடனும் நடந்து கொள்ளும்இவர்களின் உயர் பண்பு எத்தனையோ உயர் பதவிகளில் இருக்கும் மமதை பிடித்தவர்களுக்கு மிகப் பெரும் எடுத்துக் காட்டாகும். இவர்களின் சேவையை தொடர்ந்து எமது மக்களுக்கு வழங்க நினைத்த எல்லாம் வல்ல அல்லாஹ் இன்றைய தினம் இலங்கை பொலிஸ் ஆணைக்குழு வின் உறுப்பினர் என்ற உயர் பதவியை வழங்கியுள்ளான். பொலிஸ் ஆணைக்குழு வில் உள்ள ஒரே முஸ்லிம் என்பது விஷேட அம்சமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இவரின் ஆயுளை நீட்டி எமது சமூகத்திற்கு மென்மேலும் சேவைகள் செய்ய பிரார்திக்கின்றோம்.
எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)