பறகஹதெனிய பிரதேசத்தில் மீண்டும் எழுச்சி பெறும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் தஃவா நடவடிக்கைகள்......
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெறும் கிருபையினால் மீண்டும் எமது சொந்த மண்ணில் தஃவா நடவடிக்கைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
மதீனா பல்கலையில் கலாநிதி பட்டம் பெற்ற எமது மண்ணின் மைந்தன் டாக்டர் அம்ஜத் ராஸிக் மதனி அவர்கள் பிரதி ஞாயிரு தோரும் இஷா தொழுகைத் தொடர்ந்து இஸ்லாமிய கொள்கை விளக்கம் (அகீதா) மற்றும் ஹதீஸ் பாடநெறியை பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியில் நடாத்தி வருகின்றார். அல்ஹம்துலில்லாஹ்.
பொதுவாக எல்லா மக்களுக்குமாக நடைபெறும் இந்த பாடநெறியுடன் இன்ஷா அல்லாஹ் விரைவில் இளைஞர்களுக்கு விஷேட வகுப்பு ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளதாக அஷ்ஷைக் அம்ஜத் எம்மிடம் தெரிவித்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பணிகளை பொருந்திக் கொண்டு பூரணமான கூலியை இந்நிகழ்வுகளில் அர்பனிப்புடன் ஈடுபடும் எல்லோருக்கும் வழங்க வேண்டும் என துஆ செய்து கொள்கின்றோம்.