சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற்று மக்கா புனித ஹரம் ஷரீபிலே அல்குர்ஆன் மற்றும் புத்தகங்கள் தொடர்பான பிரிவுக்கு தலைவராக செயற்படும் ஒரே இலங்கையர் என்பது எம்மனைவருக்கும் பெருமையான விடயமாகும்.
அஷ்ஷெய்க் முஹம்மது ரியால் ஸீலானி (ஸாதிக் ஹாஜியார்) பறகஹதெனிய மண்ணின் இன்னுமொரு மறக்க முடியாத ஆளுமை.... சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற்று மக்கா புனித ஹரம் ஷரீபிலே அல்குர்ஆன் மற்றும் புத்தகங்கள் தொடர்பான பிரிவுக்கு தலைவராக செயற்படும் ஒரே இலங்கையர் என்பது எம்மனைவருக்கும் பெருமையான விடயமாகும்.
இலங்கை திருநாட்டில் ஏகத்துவக் கொள்கையை நிருவனமயப்படுத்தி, ஜமாஅத் அன்ஸார் ஸுன்னா அல் முஹம்மதிய்யாவை பறகஹதெனியவை தலைமையமாக கொண்டு இலங்கையின் பல பகங்களிலும் அதன் கிளைகளை நிருவிய அல்லாமா தர்வேஷ் ஹாஜியாரின் சிந்தனையில் மக்கமா நகருக்கு சிறிய வயதிலே மார்க்க கல்வியை கற்றுக் கொள்வதாற்காக சென்ற ஷெய்க் ஸாதிக் ஹாஜியார் தர்வேஷ் ஹாஜியாரின் மரைவுக்கு பின் அவருக்கு அடுத்த படியாக சவுதி குடியுரிமையை பெற்று கொண்டு கடந்த பல தசாப்தங்களாக மக்கா ஹரம் ஷரீபில் பல்வேறு உயர் பதவிகளில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்மையில் ஷெக் அவர்கள் அல் அரபிய்யா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தமது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அல்குர்ஆன் மற்றும் புத்தக பிரிவின் சேவைகளை தெளிவு படுத்தும் போது......
(Video Link)
(Video Link)
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் சேவைகளை பொருந்திக் கொண்டு நற்கூலி வழங்கிடவும் அவர்களின் இதர சமூகப் பணிகள் தொடரவும் பிரார்தனை செய்வோம்.
By: As- Sheikh M.Riskhan Musteen (Madani)