BREAKING NEWS

Oct 21, 2015

பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட YLM ஸவாஹிர் sir அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்



இலங்கையின் 17 ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டத்துக்கு அமைவாக நிறுவப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களில் ஒன்றான பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக அல்ஹாஜ் YLM ஸவாஹிர்  அவர்கள்  ஜனாதிபதியினால் இன்று (21-10-2015) தெரிவு செய்யப்பட்டார்.  

பரகஹதெனிய, சிங்ஹபுரையைச் சேர்ந்த இவர், ஈரான் ஐக்கிய அரபு ராட்சியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றிய இவர் இலங்கை வெளிநாட்டுச் சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியெய்தி இலங்கையின் தூதுவராக கடமையாற்றி ஒய்வுபெற்றவராவர். மேலும் பல்வேறு அமைச்சுக்களின் ஆலோசகராகவும் அண்மையக்காலம் வரை தமது சேவையை நாட்டுக்காக தொடர்ந்தும் வழங்கிவந்த இவரது சேவைக்கான இன்னுமொரு சன்மானமாக இந்த பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை குறிப்பிடலாம். 

இவரது சிறந்த சேவையை மென்மேலும் தொடர எமது நல்வாழ்த்துக்கள். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By OddThemes &