BREAKING NEWS

Jul 28, 2014

விடியலின் ரமழான் கேள்வி – பதில் கால எல்லை நீடிப்பு





வாசகர்களின் வேண்டுகோளிற்கமைய விடியலின் ரமழான் கேள்வி – பதில் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய நாளை 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை விடியலின் ரமழான் கேள்வி – பதிலிற்கான விடைகளை வழங்க முடியும். புனித ரமழான் மாதத்தில் இடம்பெற்ற விடியலின் ரமழான் கேள்வி – பதில் போட்டியில் ஒரு நாள் ஒரு கேள்வி என்ற அடிப்படையில் 25 கேள்விகள் கேட்கப்பட்டன. 

இந்த கேள்விகளிற்கு வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் ஆகிய மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்து பதில்கள் அளிக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக கட்டார், சவூதி அரேபியா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல உலக நாடுகளிலிருந்தும் விடைகள் அனுப்பப்பட்டன. 

இந்த நிலையில் குறித்த கேள்விகளுக்கான பதிலளிக்கும் சந்தர்ப்பம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. எனினும் விடியல் இணையத்தள வாசகர்களின் வேண்டுகோளிற்கமைய இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 

இதனால், நாளை 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விடியலின் ரமழான் கேள்வி – பதிலிற்கான விடைகளை வழங்க முடியும்.

விடியலின் ரமழான் கேள்வி – பதில். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &