BREAKING NEWS

Jul 16, 2014

மூக்கு இல்லாமல் வாழ முடியுமா? சந்தேகத்தை முறியடித்து வாழ்ந்து வருகிறது இக்குழந்தை


இங்கிலாந்தில் மூக்கு இல்லாமல் சுவாசித்து வாழ்ந்து வருகிறது 17 மாத அபூர்வ பெண் குழந்தை ஒன்று. இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் நாதன் - கிரன்னி தம்பதி. இவர்களுக்கு டீசா என்றா பெயரில் 17 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இக்குழந்தை பிறக்கும் போதே மூக்கு இல்லாமல் பிறந்துள்ளது.

கன்ஜெண்டல் அர்கினிய. (congenital arhini), என்ற குறைபாட்டுடன் மூக்கு இல்லாமல் பிறந்த டீசா தன்னுடைய வாயின் மூலமே மூச்சுவிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார்.

வாசம் என்பதையே என்னவென்று அறியாத இந்த குழந்தைக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் தொந்தரவு இருப்பதாக இந்த குழந்தையின் தாயார் கிரன்னி கூறுகிறார்.

மூக்கு இல்லாமல் வாழ முடியுமா என்ற மற்றாவர்களின் சந்தேகத்தை முறியடித்து வாழ்ந்து வருகிறது இக்குழந்தை. விரைவில் இக்குழந்தைக்கு செயற்கை மூக்குப் பொருத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &