BREAKING NEWS

Jul 15, 2014

பெரும்பான்மை எதிரிகளை சிறுபான்மை முஸ்லிம்கள் வெற்றிகொண்ட நாள்


பத்ர் போர் பெரும்பான்மை எதிரிகளை சிறுபான்மை முஸ்லிம்கள் வெற்றிகொண்ட நாள் இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த வீரமும் துணிவும் கொண்ட இஸ்லாமிய போராளிகளின் வெற்றிநாள். 

ரமழான் பிறை 17 இல் உலகளாவிய முஸ்லிம் உம்மாவினால்  நினைவு கூறும் நாள் பதர்நாள் .

பத்ர் போர் இஸ்லாமிய வரலாற்றில் முதல் போராகும் போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சிறுபான்மையான சுமார் 313 முஸ்லிம்கள்  கனரக ஆயுதங்கள் தரித்த 1000 பேர் கொண்ட பெரும்பான்மை எதிரிகளை களத்தில் சந்தித்து எதிரிகளை வீழ்த்திய நாள் .

அந்த சிறுபாண்மையினருக்கு ஈமான்  கொடுத்த வீரத்தாலும் , தியாகத்தாலும்  அல்லாஹ்வின் உதவியைப் பெற்று எதிரிகளை சிதறடித்த நாள் . இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் -ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடைபெற்றுள்ளது.

அன்று அந்த சிறுபான்மை முஸ்லிம்கள் அடங்கி ஒடுங்கி இருந்தால் இன்று இஸ்லாத்தின் எழுச்சியை உலகம் கண்டிருக்காது என வரலாற்றாளர்கள் குறிப்பிடுவது சுட்டிக்காட்டத்தக்கது .

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &