BREAKING NEWS

Jun 22, 2013

நுவரெலியா பகுதிகளில் மண்சரிவு அபாயம்

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட பரிசோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முறையான இட பராமரிப்பு இன்மையால் இந்த மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் நுவன் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

இதனால் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் இருந்து 13 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முறையான நில பாவனை குறித்து தோட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தேசிய கட்டட பரிசோதனை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &