அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.போஸ்ரன் நகரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டி நிறைவின்போதே இந்த குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
'இந்த குண்டு தாக்குதல்களை மேற்கொண்டவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம்' என தொலைக்காட்சி மூலமாக ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். தேவையான பாதுகாப்புக்கள் அமெரிக்காவில் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

