கண்டியில் பொது பலசேனாவின் பொதுக்கூட்டம் மூடிய அறையில் நடப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த (9.2.2013) தினத்திற்கு முதல் நாள் இரவு பச்சை நிற பெயிண்ட் மூலம் ஸ்பிரே பண்ணப்பட்டு பின்னர் அதன் மீது வெள்ளை நிறத்தில் வித்தியார்த்த மாவத்தை என ஸ்ப்ரே பண்ணப்பட்டுள்ளதைக் காணலாம்.
இதேபோல் கண்டி முஸ்லிம் பள்ளி வீதி (மொஸ்க் லேன்)யின் பெயருக்கும் தார்ப்பூச்சு இடம் பெற்று அதன் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
யுத்தம் முடிந்து அமைதி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் இக்காலக்கட்டத்தில் நடக்கும் இப்டியான நடவடிக்கைள் எங்கு சென்று முடிவடையும் என்பது புரியாத புதிராக உள்ளது.