BREAKING NEWS

Feb 10, 2013

மத அச்சுறுத்தல் களை அறிவிக்க 24 மணிநேர Hot Line அறிமுகம்


மத வன்முறைகளுக்கு முறையிட 24 மணிநேர  Hotline  தொலைபேசி இலக்கங்களை இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிமுகப் படுத்தியுள்ளது . குறித்த Hotline  தொலைபேசி  இலக்கங்கள் நாளை ஞாயிற்று கிழமை முதல் இயங்கும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அவசர அழைப்பு இலக்கங்கள் 011-3182904, 011-3188753 or FAX 011-2423944.
இலங்கை பல மதங்கள் அமைதியாக வாழும் நாடு இருப்பினும் சமையங்கள்  மீது தாக்குதல்  இடம்பெறும்போது பாதிக்கப் பட்டவர்கள்  போலிசில் முறையிடுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த   அவசர அழைப்பு இலக்கங்கள் அறிமுகப்படுத்தப் படுகிறது. மதத்தின் பெயரால் அச்சுறுத்தல்கள் அல்லது துன்புறுத்தல்களை  எதிர்கொண்டால் குறித்த இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது .

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &