காஸா பாலஸ்தீன மக்கள் படும் அவதியில் பங்கு கொள்ளும் விதமாக கட்டார் அரசு தனது நாட்டின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது .
அரசாங்கத் தரப்பினால் சிறியதோ பெரியதோ எவ்விதக் கொண்டாட்ட ஏற்பாடுகளும் இடம்பெறாது என கட்டார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் அறிவித்துள்ளார்.
அத்தோடு ஏனையவர்களையும் வீண் களியாட்டங்களில் ஈடுபடவேண்டாம் எனவும் பணித்துள்ளார்.