BREAKING NEWS

Jun 9, 2013

சீரற்ற காலநிலை: விமான நிலைய -த்திற்கும் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று வீசிய பலமான காற்று காரணமாக விமானநிலையத்தினுள் மரமொன்று முறிந்து விழுந்துள்ளதுடன் பல விளம்பரப் பதாதைகளும் உடைந்து விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் இதன் காரணமாக சில விமானங்கள் புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &