சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே இன்று மும்பையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.
அவரது மறைவால் சிவசேனைத் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால்தாக்கரே. 86 வயதான அவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த புதன்கிழமை இரவு அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூச்சுவிட திணறியதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதன் காரணமாக மராட்டிய மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது.
மும்பையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மும்பை பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து அதிரடிப்படை வீரர்களும் வந்தனர். நேற்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
இன்று காலையிலும் இதே நிலை நீடித்தது. மாலை 3.30 மணியளவில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனால் அவரது வீட்டு வாசலில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சில நிமிடங்களில் அவர் மரணம் அடைந்துவிட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இந்த செய்தி வெளியில் இருந்த சிவசேனா கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் பரிமாறப்பட்டது. உணர்ச்சிவசப்பட்ட அவர்கள் கண்ணீர் வடித்து கதறி அழுதனர்.
பால் தாக்கரே மரணம் அடைந்த செய்தி கேட்டதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவரது வீட்டின் முன்னே பத்திரிகையாளர்கள் ஏராளமாக திரண்டிருக்கிறார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் மாராட்டிய மாநிலமெங்கும் பதட்ட நிலை தொடர்கிறது. மும்பை நகரம் கிட்டத்தட்ட முடங்கியுள்ளது.
நாளை இறுதிச் சடங்கு
தாக்கரேயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை பிற்பகல் வரை வரை சிவாஜி பூங்காவில் வைக்கப்படும். பின்னர் மாலையில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
இவரை பற்றி..
பாலா சாஹேப் தாக்கரே என்று பிரபலமாக அறியப்படும் பால் கேஷவ் தாக்கரே மராட்டி:1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி பிறந்தவர். இவர், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலமான மஹாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கான இனம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிவ சேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார்.
பாலா சாஹேப் தாக்கரே (மாதம் இரு முறை வெளிவரும் பத்திரிகையான பிரபோதன் அல்லது “ஞானோபதேசம்” என்று பொருள்படும் பத்திரிகையில் தாம் எழுதிய கட்டுரைகளால், பாலகட் மத்தியப் பிரதேசத்தில், பிரபோதாங்கர் தாக்கரே என்றும் அறியப்பட்ட) கேஷவ் சீதாராம் தாக்கரே என்பவரின் மகனாகக் கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கேஷவ் தாக்கரே ஒரு முற்போக்கு சமூக சேவகர் மற்றும் எழுத்தாளராக விளங்கினார்.
வேறுபாடுகளுக்கு எதிராகப் பணியாற்றி (ஒன்றிணைந்த மஹாராஷ்டிரா இயக்கம் என்றே நேரடியாகப் பொருள்படுவதான) சம்யுக்தா மஹாராஷ்டிரா சல்வால்|சம்யுக்தா மஹாராஷ்டிரா சல்வால் என்னும் இயக்கத்தின் மூலம் 1950ஆம் ஆண்டுகளில் மராத்திய மொழி பேசும் மாநிலமாக மஹாராஷ்டிரா உருவாவதிலும், அதன் தலைநகராக மும்பய் அமைவதிலும் முக்கியப் பங்காற்றினார்.
பாலா சாஹேப் தாக்கரே தமது தொழில் வாழ்க்கையை மும்பய் நகரில் 1950ஆம் ஆண்டுகளில் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்னும் ஒரு பத்திரிகையில் கேலிச் சித்திரக்காரராகத் துவங்கினார். அவரது கேலிச் சித்திரங்கள் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஞாயிறு பதிப்புகளிலும் வெளியாயின. 1960ஆம் வருடம் அவர் மர்மிக் என்னும் கேலிச்சித்திர வார இதழ் ஒன்றைத் தனது சகோதரருடன் இணைந்து துவக்கினார். குறிப்பாக குஜராத்தியர் மற்றும் தென்னிந்தியக் கூலி வேலையாட்களை இலக்காக்கி, மும்பயில் மராத்தியர்-அல்லாதவர்களின் செல்வாக்கை எதிர்ப்பதற்கான பிரசாரமாக அதைப் பயன்படுத்திக் கொண்டார்.
1966ஆம் வருடம் ஜூன் மாதம் 19ஆம் தேதி, அவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் (மராத்தியர்கள் என்றழைக்கப்படும்) பிறப்புரிமையாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நோக்கத்துடன் சிவ சேனாவைத் துவக்கினார். சிவ சேனாவின் ஆரம்ப கால நோக்கமானது தென்னிந்தியர்கள், குஜராத்திகள் மற்றும் மார்வாடிகள் போன்று வேறு மாநிலங்களிலிருந்து வந்த குடியேறிகளுக்கு எதிராக மராத்தியர்கள் பணிககாப்பு பெறுவதை உறுதி செய்வதாகவே இருந்தது.
அரசியல் ரீதியாக, சேனா பொதுவுடமைக் கட்சிக்கு எதிரானதாக விளங்கி, மும்பயின் பிரதான வர்த்தகத் தொழிலாளர் சங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை இந்தியப் பொதுவுடமைக் கட்சியிடமிருந்து பறித்து, பெரும்பாலும் குஜராத்தி மற்றும் மார்வாடி வணிகத் தலைவர்களிடமிருந்து காப்புப் பணம் வசூல் செய்வதாகவே இருந்தது.
பின்னர், இது பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி)யுடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்டது. பிஜேபி-சிவ சேனா கூட்டணி 1995ஆம் வருடம் மஹாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி அடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1995 முதல் 1999வது வருடம் வரை அரசு புரிந்த காலகட்டத்தில் தாக்கரேயை “தொலைவிலிருந்து இயக்குபவர்” என்று அடைபெயர் இட்டு அழைத்தனர். இதன் காரணம் அவர் அரசின் கோட்பாடுகள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு பெரும்பங்கு ஏற்றதேயாகும்.
1999 ஜூலை 28ல் தேர்தல் ஆணையம் பால் தாக்கரேயை டிசம்பர் 11, 1999 முதல் டிசம்பர் 10,2005 வரையான ஆறு ஆண்டு காலத்திற்கு எந்த தேர்தலிலும் வாக்களிக்கவோ அல்லது போட்டியிடவோ கூடாது என்று தடை விதித்தது.தடைகாலம் முடிந்தபின் மீண்டும் 2006ஆம்
ஆண்டு நடந்த மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் வாக்களித்தார்.தடை இருந்த போதிலும் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகாமல் தொடர்ந்து தன கட்சியினருக்குஊக்கமளிக்கும் தலைவராகவே செயல்பட்டு வந்தார்.
சிவ சேனா கட்சி, மராத்தி மனூக்களுக்கு (சாமானிய மராத்தியர்கள்) மும்பய் நகரில் பொதுத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் உதவியதாக தாக்கரே கோருகிறார். சிவ சேனா அரசு புரிந்த கால கட்டத்தில், தனது அடிப்படை சித்தாந்தமான ‘மண்ணின் மைந்தர்கள்’ என்னும் கருத்தாக்கத்துக்கு மாறாக, மராத்திய இளைஞர்கள் பெரும்பாலானோரின் முக்கியப் பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகளான பொதுவுடமைக் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
சர்ச்சைகள்
வேறு மாநிலங்களிலிருந்து மும்பய் நகரில் குடியேறுபவர்கள், இந்து-அல்லாதவர்கள் (குறிப்பாக முஸ்லீம்கள்) மற்றும் பங்களாதேஷ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறும் முஸ்லீம்கள் ஆகியோரை எதிர்ப்பதில் தாக்கரே மிகவும் வெளிப்படையாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு வருகிறார். 1960ஆம் ஆண்டுகளின் இறுதிப்பகுதிகளில் துவங்கி 1970ஆம் ஆண்டுகளின் இடைக்காலம் வரையிலும் “மஹாராஷ்டிரா மராத்தியர்களுக்கே” என்ற தமது பிரசாரத்தின் ஒரு பகுதியாக தென் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் மும்பயை விட்டு வெளியேறா விட்டால் அவர்களுக்குத் தீங்கு விளையுமென்று தாக்கரே அச்சுறுத்தி வந்தார்.
2002ஆம் வருடம், தாக்கரே இஸ்லாமிய வன்முறை எனக் கூறப்பட்டதை எதிர் கொள்ள இந்துக்களின் தற்கொலைப் படைகளை உருவாக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்:
அவ்வாறு தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டால்தான் நம்மால் வந்தேறிகளின் வெறித்தனமான வன்முறையை எதிர்கொள்ள இயலும் என்றார்.இங்ஙனம் தாக்கரேயின் அறைகூவலுக்கு எதிர் வினையாக, வெவ்வேறு சமூகங்களுக்கு இடையில் பகைமையைத் தூண்டுவதாக மராத்திய அரசு அவர் மீது வழக்குத் தொடுத்தது.
“இஸ்லாமியர்களுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு” “தொல்லை கொடுக்கும் இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்… நாலு கோடி [நாற்பது மில்லியன்] பங்களாதேஷ் இஸ்லாமியர்களை உதைத்துத் துரத்துங்கள்; அதன் பிறகு நாடு பாதுகாப்புறுதி பெறும்” என்று சிவ சேனைத் தலைவர் கூறினார். இந்தியாவை “இந்து ராஜ்யம்” (இந்து நாடு) என்று அழைக்கத் தொடங்குமாறு இந்துக்களை வலியுறுத்திய அவர், “நமது மதம் (இந்து மதம்) மட்டுமே இங்கு மதிக்கப்பட வேண்டும்” என்றும் “மற்ற மதத்தவர்களை நாம் கவனித்துக் கொள்வோம்” என்றும் கூறினார்.
குறைந்த பட்சமாக, ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளான லெஃப்டினண்ட் கர்னல் ஜயந்த் ராவ் சிடாலே மற்றும் லெஃப்டினண்ட் ஜெனரல் பி.என்.ஹூன் (மேற்கத்திய ராணுவப் படையின் முன்னாள் முதன்மைத் தலைவர்) ஆகிய இருவரும் துவங்கி நிர்வகித்து வந்த இரண்டு இயக்கங்கள், இந்தியாவில் தற்கொலைப் படை அமைக்குமாறு பால் தாக்கரே விடுத்த அறைகூவலுக்குப் பதிலிறுத்தன. லெஃப்டினண்ட் ஜெனரல் ஹூன், பயிற்சி முகாம்களை அமைக்குமாறு தாக்கரே தமக்குக் கட்டளை இட்டதாகக் கோரினார்.
தமது கட்சியின் செய்தி மடலான சாம்னா (எதிர்த்து நில்) என்னும் பத்திரிகையில், எளிதில் உணர்ச்சிகளைத் தூண்டும் கட்டுரைகளைத் தாக்கரே தொடர்ந்து பிரசுரித்து வந்தார்.
சச்சின் டெண்டுல்கர், ஒரு பேட்டியில் “மும்பய் இந்தியாவிற்கு சொந்தமானது…” என்று கூறி விடுத்த ஒரு அறிக்கையை விமர்சித்து, 2009வது வருடம் நவம்பர் 11 அன்று, சாம்னா பத்திரிகையில் தாக்கரே ஒரு தலையங்கத்தைப் பிரசுரித்தார்.
“நான் ஒரு மராத்தியன்; அதைக் குறித்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்; ஆனால், முதன்மையாக நான் ஒரு இந்தியன்” என்று சச்சின் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து பால் தாக்கரேவிற்கு பரந்த அளவில் எதிர்ப்புகள் உருவாகத் துவங்கின.
2008ஆம் வருடம் மார்ச் மாதம் ஆறாம் நாள், பால் தாக்கரே, சிவ சேனாவின் அரசியல் பிரசாரப் பத்திரிகையான சாம்னா வில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பீஹாரிகள் ஒரு “விரும்பத்தகாத கூட்டம்” என்னும் பொருள்படும்படியாக “ஏக் பீஹாரி, ஸௌ பிமாரி (ஒரு பீஹாரி நூறு நோய்) ” என்னும் தலையங்கம் ஒன்றை எழுதினார்.
“அவர்கள் [பீஹாரிகள்] தென் இந்தியாவில், அசாமில், பஞ்சாப் மற்றும் சண்டிகாரிலும் கூட விரும்பப்படுவதில்லை. தாங்கள் எங்கே தங்கினாலும், உள்ளூர் மக்களை பீஹாரிகள் பகைத்துக் கொண்டுள்ளார்கள். உபி-பீஹாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் மராத்தியருக்கு எதிரான கிளர்ச்சியை பாராளுமன்றத்தில் உருவாக்கியதன் மூலம் மும்பய் மற்றும் மஹாராஷ்டிராவிற்குத் தமது நன்றி கெட்ட தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.”
மும்பய் வாசிகள் மற்றும் மராத்தியர்களை விமர்சனம் செய்வதன் மூலம், “தாங்கள் உண்ணும் தட்டிலேயே எச்சில் துப்புகிறார்கள்” என்று கூறி பீஹார் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். அவர் மேலும் “மும்பய்வாசிகள் அழுகிய மூளை கொண்டவர்கள் என்று கூறி அணைந்து விட்ட நெருப்புக்கு எண்ணை ஊற்ற அவர்கள் முயல்கிறார்கள்.”
அத்துட்ன், இந்துக்களின் புது வருடக் கொண்டாட்டமான (திவாலி) என்பதற்கு ஆறு நாட்கள் கழித்துப் பெரும் அளவில் கொண்டாடப்படும் சத் பூஜா என்னும் முதன்மையான விடுமுறையில் ஈடுபடுவதற்காக பீஹார், உ.பி. மற்றும் ம.பி ஆகியவற்றிலிருந்து வந்த பாராளுமனற உறுப்பினர்களை அவர் விமர்சித்துள்ளார். அது உண்மையாகவே ஒரு விடுமுறை நாள் அல்ல என்று அவர் கூறினார். வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை நடவடிக்கைகளுக்குத் தடங்கல் ஏற்படுத்திய பீஹார் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பதிலிறுப்பாக வெடித்த ஒரு நிகழ்வாகத்தான் இது காணப்பட்டது.
இந்தக் கருத்துக்களினால் மனம் புண்பட்ட பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இந்தப் பிரச்சினையில் மத்திய அரசும் பிரதமரும் உடனடியாகக் குறுக்கிட வேண்டும் என்று கோரினார். சாம்னா வில் வெளியான தலையங்கம், குறைந்த பட்சம் ஆர்ஜேடி, ஜேடி(யு), எஸ்பி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் பிஹார் மற்றும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்கள், பால் தாக்கரேவிற்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு கோரி வற்புறுத்த வழி வகுத்தது.
மக்களவையில் இந்த விஷயம் எழுப்பப்பட்டதும், அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறினார்: “இந்த அவையின் நடவடிக்கைகளில் அதன் உறுப்பினர்கள் ஈடுபடுவது பற்றி யாராவது விமர்சனம் செய்தால், நாம் அதற்குத் தகுந்த முறையில் அவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டும் அல்லாமல், இந்த அவையின் நடைமுறைகள் மற்றும் சிறந்த முறையில் நிலை நாட்டப்பட்ட மரபுகளுக்கு ஏற்றபடி அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.” யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள்.”என்று எச்சரித்தார்.
2008வது வருடம் மார்ச் 27 அன்று, பால் தாக்கரேயின் தலையங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து , டெல்லியில் சிவ சேனாவின் தலைவர்கள், மஹாராஷ்டிராவில் மராத்தியர் அல்லாதோருக்கு எதிராக அதன் “வன்செயலான நடத்தை”யைக் காரணம் காட்டி ராஜினாமா செய்து, தாங்கள் ஒரு தனிக் கட்சியைத் துவக்கப் போவதாக அறிவித்தனர். சிவ சேனாவின் வட இந்தியத் தலைவரான ஜெய் பக்வான் கோயல் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில், மராத்தியர்களுக்கு ஆதரவான “பாரபட்சமான போக்கினை” கட்சித் தலைமை கொண்டிருப்பதன் காரணமாகவே கட்சியை விட்டு விலகும் முடிவை எடுத்ததாகக் கூறினார்.
‘காலிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் தீவிரவாதக் குழுக்களிலிருந்து சிவ சேனா மாறுபட்ட ஒன்றல்ல. மாநில ரீதியாக மக்களைப் பிரிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த இயக்கங்களின் பிரதான நோக்கம் நம் நாட்டை உடைப்பதுதான். மஹாராஷ்டிரா ந்வ நிர்மாண் சேனாவைப் போல, சிவ சேனாவும் வட இந்தியர்களைக் கேவலப்படுத்தி அவர்களை மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தியுள்ளது” என்று அவர் கூறினார்.
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமை தாக்கரே மிகக் கடுமையாகவே விமர்சித்து வந்துள்ளார். கலாம் நாட்டின் முன்னணி அறிவியலாளர் என்றும், ஆனால், அவர் குடியரசுத் தலைவரானதும், அந்தப் “பதவியின் கண்ணியத்தை இழந்து விட்டார்” என்றும் தாக்கரே கூறியுள்ளார்.
2001வது வருடத்திய இந்தியப் பாராளுமன்றத் தாக்குதல் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முஹம்மது அஃப்சல் மீதான தண்டனை குறித்து கலாம் முடிவெடுக்க இயலாதிருந்ததைக் குறித்து அவர் விமர்சித்துள்ளார். தீவிரவாதி ஒருவன் கருணை கோரி தொடுத்துள்ள மனு கலாமின் பரிசீலனையில் உள்ளது என்பதையே தாக்கரே விமர்சித்துள்ளார்.
“அக்டோபர் மாதம், இந்த நாட்டின் உச்ச நீதி மன்றத்தால் அஃப்சலுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது; இருப்பினும், அந்தக் கோப்பானது குடியரசுத் தலைவரின் மேசையில் கடந்த நாலு மாதங்களாகத் தூசி படிந்து கிடக்கிறது. கலாம் பற்றி நான் தவறாக ஏதும் கூறவில்லை. அவர் குடியரசுத் தலைவர் ஆவதற்கு நாங்கள் அனைவருமே ஆதரவளித்தோம். அஃப்சலின் கருணை மனு இன்னமும் குடியரசுத் தலைவரின் கிடங்கலிலேயே உள்ளது. இதைப் போல, ஒரு கருணை மனுவின் மீது முடிவெடுக்க நாலு மாதங்களுக்கு மேலாக குடியரசுத் தலைவர் எடுத்துக் கொண்ட மற்றொரு உதாரணத்தை எனக்குக் காட்டுங்கள்.” என்றார்.
கலாம் பற்றிய அவரது கருத்துக்களுக்குப் பாராளுமன்ற நடவடிக்கைகள் அமைச்சரான பிரியா ரஞ்சன் தாஸ்முனி பொருத்தமற்றவை என்றும் மற்றும் “கண்ணியம் மீறும் தன்மையிலானவை” என்றும் பெருமளவில் கண்டனம் தெரிவித்தார்.
தாக்கரே ஒரு முறை,””நான் ஹிட்லரை வியந்து பாராட்டுபவன்; அப்படிச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை! அவர் கடைப்பிடித்த வழி முறைகள் அனைத்தும் சரியானவை என்று நான் கூறவில்லை; ஆனால், அவர் ஒரு மிகச் சிறந்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் சொற்பொழிவாளர்…. அவருக்கும் எனக்கும் பொதுவான பண்புகள் பல உள்ளன என்று நான் உணர்கிறேன். இரக்க மனப்பாங்குடன் ஆனால் இரும்புக் கரத்துடன் ஆள்கின்ற ஒரு வல்லாட்சியாளர் தான் இந்தியாவிற்கும் மெய்யாகவே தேவை.” என்று தெரிவித்திருந்தார்.
இதை 2007ஆம் வருடம் ஜனவரி 29 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பிரசுரமான ஒரு பேட்டியில் தாக்கரே கூறியிருந்தார்:”மிகவும் கொடுமையான, அருவருப்பான காரியங்களை ஹிட்லர் செய்தார். ஆனால், அவர் ஒரு கலைஞர்; (அதற்காக) நான் அவரை நேசிக்கிறேன். ஒரு தேசத்தையே, மனித வெள்ளத்தையே தன்னுடன் கூட்டிச் செல்லும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். அவர் என்ன மாயம் செய்தார் என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் ஒரு அற்புதம்… யூதர்கள் கொல்லப்பட்டது தவறுதான். ஆனால், ஹிட்லரைப் பொறுத்த ஒரு நல்ல விஷயம் அவர் ஒரு கலைஞர் என்பது. அவர் ஒரு அஞ்சா நெஞ்சர். அவரிடம் நல்ல குணங்களும் தீய குணங்களும் இருந்தன.என்னிடமும் நல்ல குணங்களும் தீய குணங்களும் இருக்கக் கூடும்.என்றவர்
பிறிதொரு சமயம் ஸ்டார் பிளஸ் தொலைக் காட்சியின் ஸ்டார் டாக் என்னும் பேச்சு நிகழ்வு ஒன்றில், தாம் ஹிட்லரை வியப்பவர் அல்ல என்று தாக்கரே கூறினார்.
இந்துக்களுக்கு எதிரான மத ரீதியான தீவிரவாதம் மிகுந்துள்ள சூழலில், தாக்கரே இவ்வாறு கூறியது முறையானதுதான் என்று அவரது ஆதரவு பத்திரிகையாளர்களான வர்ஷா போஸ்லே போன்றவர்கள் கூறியுள்ளனர். “ஜெர்மனியின் யூதர்களைப் போல இந்திய முஸ்லீம்கள் நடந்து கொண்டால், அவர்களுக்குக் கிடைத்ததுதான் இவர்களுக்கும் கிடைக்கும்” என்ற தாக்கரேயின் அறிக்கைக்கு ஆதரவளித்து போஸ்லே எழுதினார்:
2007ஆம் வருடம் ஆகஸ்ட் 20ஆம் தேதி, நியூஇந்தியாபிரஸ்.காம் என்னும் வலைத்தளத்தில் வெளியான ஒரு கட்டுரையில், இந்தியா முழுமைக்கும் ஹிட்லரைப் போன்ற ஒரு வல்லாட்சியாளராகத் தாம் இருக்க விரும்புவதாக தாக்கரே கூறியதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது:
அது குறித்து “ஆம், நான் ஒரு வல்லாட்சியாளர் தான். இந்தியாவிற்கு இன்று தேவை ஒரு ஹிட்லர்தான்.” “என்னைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்று அவர் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. “நான்தான் மஹாராஷ்டிரா முழுவதற்குமான (ஹிட்லர்) மற்றும் இந்தியா முழுமைக்குமாக அவ்வாறு விளங்க விழைகிறேன்.“என்றார் 1996ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஒரு பேட்டியில் அவுட்லுக் பத்திரிகையாலும், ஹிட்லர் பற்றிய கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது. “ஹிட்லரின் சில குணாதிசயங்கள் குறித்து ஒரு முறை நீங்கள் பாராட்டியுள்ளீர்கள்.” “ஒப்புமையைத் தவிர்க்க முடியவில்லை” என்று மேலும் தூண்டும் முறையில் பேட்டியாளர் கூறினார். தாக்கரே கூறினார்: “நான் விஷ வாயு அறைக்கு யாரையும் அனுப்பவில்லை. அப்படி நான் இருந்திருந்தால், நீங்கள் துணிந்து என்னைப் பேட்டி எடுக்க என்னிடம் வந்திருக்க மாட்டீர்கள்.”
இப்படி அதிரடிக் காரரான தாக்கரே தமிழ்ப் புலிகளுக்கு ஆதரவானவர் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் கூறினார்: “விடுதலைப் புலிகளின் கம்பீரமான போராடும் முறைக்காக நான் அவர்களைக் குறித்துப் பெருமை அடைகிறேன்.: எல்டிடிஈயின் மீதான தடையுத்திரவை மத்தியப் போக்கு கொண்ட நடுவண் அரசு நீக்க வேண்டும்”:” என்றும் அவர் விரும்பினார்.
பால் தாக்கரேயின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளில் ஒன்று, காதலர் தினம் என்றழைக்கப்படும் ஒரு மேற்கத்திய விடுமுறை நாளைக் கொண்டாட இளைஞர்களை அனுமதிக்கும் கடைகள் மற்றும் உணவகங்களைப் புறக்கணிப்பதாகும். இந்தக் கொண்டாட்டத்திற்கு அவர், சிற்றின்ப நாட்டமுள்ள விலங்கியல்பு கொண்டது என்றும் அநாகரிகமானது மற்றும் இந்தியத் தன்மைக்கு எதிரானது என்று மேல்விளக்கம் அளிக்கிறார். இத்தகைய புறக்கணிப்புகள் பல நேரங்களில் வன்முறையிலும் அத்தகைய கடைகள் நாசமாக்கப்படுவதிலும் விளைந்திருக்கின்றன.
2006ஆம் வருடம் ஃபிப்ரவரி 16 அன்று மும்பயில் தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த ஒரு காதலர் தினக் கொண்டாட்டத்தில் சிவ சேனா உறுப்பினர்கள் நிகழ்த்திய வன்முறைத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து பாலா சாஹேப் தாக்கரே மன்னிப்பு கேட்டுக் கொண்டார். “நல்லோஸ்பரா சம்பவத்தில் பெண்கள் அடிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். மெய்யாகவே அவ்வாறு நடந்திருந்தால், அது கோழைத்தனத்தின் சின்னமாகும்” என்று தாக்கரே கூறினார்.
“எந்த ஒரு சூழ்நிலையிலும் பெண்களை அவமானப்படுத்தவோ, மிரட்டவோ கூடாது என்று நான் சிவ சைனிக்குகளிடம் எப்போதுமே கூறி வந்துள்ளேன்.” தாக்கரேவும் சிவ சேனாவும், ஒரு “இந்திய மாற்று நிகழ்வுக்கு” ஆதரவளிக்கக் கூடுமெனினும், காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளனர்.