BREAKING NEWS

Jun 26, 2014

ஹக்கீம் - கோத்­த­பாய இடையிலான பேச்சு வார்த்தை

நீதி­ய­மைச்­சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீமுக்கும் பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது

நடை­பெற்ற இந்த சந்­திப்­பின்­போது அண்­மையில் அளுத்­கம, தர்கா நகர்,வெலிப்­பன்ன மற்றும் பேரு­வளை ஆகிய பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இது­போன்ற வன்­முறைச் சம்­பவங்கள் எதிர்­கா­லத்தில் இடம்­பெ­றாமல் இருக்க எடுக்­கப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்தும் இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

சந்­திப்பில் கருத்து வெளி­யிட்ட பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ அனைத்து மத தலை­வர்­க­ளையும் சந்­தித்து அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டியே இது­போன்ற பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ண­வேண்­டி­யுள்­ளது என்று குறிப்­பிட்­ட­தாக அறிய முடிகிறது

இதன்போது ஒரு சம்­பவம் இடம்­பெற்­ற­துடன் இது­போன்ற கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­து­வ­தை­விட நீண்­ட­கால அடிப்­ப­டையில் திட்­டங்­களை முன்­னெ­டுத்து செயற்­ப­டு­வது அவ­சி­ய­மாகும் என்று நீதி­ய­மைச்சர் ரவூப் ஹக்கீம் சந்­திப்பில் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் அறிய முடிகிறது

இதே­வேளை அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்ற பிரதேசங்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்திப்பின்போது உறுதியளித்ததாகவும் அறிய முடிகிறது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &