BREAKING NEWS

Sep 8, 2013

தபால் மூல வாக்கெடுப்பு நாளை, நாளை மறுதினம்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களில் இடம்பெறவுள்ளது. 

இதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக பிரதித் தபால் மா அதிபர் ஏ.ஜி.விக்ரமசிங்க தெரிவித்தார். 

மேலும் வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களுக்கும் இன்று (08) உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும். 

எதிர்வரும் 13ம் திகதிவரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதித் தபால் மா அதிபர் குறிப்பிட்டார். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &