புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்தில் இன்று புதன்கிழமை தென்பட்டவில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சற்றுமுன்னர் அறிவித்ததுள்ளது.
.
இதற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை வியாழக்கிழமை 30ஆவது நோன்பு நோற்குமாறும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெருநாளை கொண்டாடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது.
.
ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயமுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள்இ தைக்காக்கள் மற்றும் சாவியக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.