கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் ரீட் மாவத்தை, சேரம் வீதி, ஜே.டி.பெர்னாண்டோ மாவத்தை தெமட்டகொட வீதியில் மரம் முறிந்து விழுந்தமையின் காரணமாக பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
கொழும்பில் இன்று (23) காலை வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள் மற்றும் மரக் கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.
வீதிகளின் குறுக்கே விழுந்துள்ள மரங்கள் மற்றும் மரக் கிளைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.