BREAKING NEWS

Jul 23, 2013

சீனாவை உலுக்கிய பூமியதிர்ச்சிகள்: 75 பேர் பலி

வட­மேற்கு சீனா­வி­லுள்ள கான்ஸு மாகா­ணத்தைத் தாக்­கிய அதி­சக்தி வாய்ந்த இரு பூமி­ய­திர்ச்­சி­களால் குறைந்­தது 75 பேர் பலி­யா­ன­துடன் 500 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

முத­லா­வது 5.98 ரிச்டர் பூமி­ய­திர்ச்­சி­யா­னது டிங்ஸி நக­ருக்கு அண்­மையில் 9.8 கிலோ மீற்றர் ஆழத்தில் தாக்­கி­யுள்­ளது.

அந்த பூமி­ய­திர்ச்சி தாக்கி ஒரு மணித்­தி­யா­ல­த்தில் அதே பிர­தே­சத்தை 5.6 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்சி தாக்­கி­யுள்­ளது.




மேற்­படி பூமி­ய­திர்ச்­சி­களைத் தொடர்ந்து அந்த பிராந்­தி­யத்தை 371 சிறிய பூமி­ய­திர்ச்­சிகள் அடுத்­த­டுத்து தாக்­கி­யுள்­ளன.

இந்தப் பூமி­ய­திர்ச்­சி­களால் ஸாங்­ஸியான் எனும் இடத்தில் குறைந்­தது 5,600 வீடுகள் கடும் சேதத்­திற்­குள்­ளா­கி­யுள்­ள­துடன் 380 வீடுகள் இடிந்து விழுந்­துள்­ளன.

18 மாடி­களைக் கொண்ட தொழிற்­சாலைக் கட்­ட­ட­மொன்று பூமி­ய­திர்ச்­சியால் தரைமட்­ட­மா­கி­யுள்­ளது.

மேலும், பல பிர­தே­சங்­களில் மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ள­துடன் கைய­டக்கத் தொலை­பேசி தொடர்­பா­டல்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

வீடுகள் இடிந்து விழுந்­த­தா­லேயே பலரும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மேற்­படி பூமி­ய­திர்ச்­சி­களால் 198 மில்­லியன் யுவான் (32 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்) பொரு­ளா­தார நஷ்டம் ஏற்­பட்­டுள்­ள­தாக டிங்ஸி நகர அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.




இந்­நி­லையில் சீன ஜனா­தி­பதி ஸி ஜின்­பிங்கும் பிர­தமர் லி கெகி­யாங்கும் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் மீட்புப் பணி­களை துரி­த­மாக முன்­னெ­டுக்க வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இந்­நி­லையில், தீய­ணைப்புப் படை வீரர்கள் மோப்ப நாய்கள் சகிதம் மீட்புப் பணியில் ஈடு­பட்­டுள்­ளனர். அத்­துடன் மீட்பு நட­வ­டிக்­கையில் 500 படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவின் சிசுவான் மாகாணத்தை 2008 ஆம் ஆண்டு தாக்கிய பூமியதிர்ச்சியில் 90,000 க்கும் அதிகமானோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &