1919 என்ற அரச தகவல் கேந்திர நிலையத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பப்படிவங்களை நிரப்புவதற்குரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் 1919 எனும் இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவதன் மூலம் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதிக்கு முன்னர் அந்தந்த தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.