சிறிலங்காவில் அடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையே என்று, பௌத்த,சிங்க அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்ததேரர்,
“இந்த நாட்டில் அடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் என்று உறுதியாக எம்மால் கூறமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.