BREAKING NEWS

May 12, 2013

கோடபாய மற்றும் ஹக்கீம் இடையில் சூடான வார்த்தை பிரயோகம்

அஸாத் சாலி கைது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோடபாய ராஜபக்ஷவுக்கும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையில் சூடான வார்த்தை பிரயோகங்கள் பரிமாறப் பட்டதாக சிங்கள ஊடகச் செய்து ஒன்று குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத  தடுப்பு சட்டத்தின்  கீழ்   அஸாத் சாலி   கைது செய்யப்பட்டமை நீதி அமைச்சர் ஹக்கீமை கடும் கோபம்கொள்ள செய்துள்ளது . அரசாங்கத்தின் இந்த கைது நடவடிக்கையை மீது ஹக்கீம்  கண்டனம் தெரிவித்துள்ளார் .  இதை தொடர்ந்து  கோடபாய ராஜபக்ஷ நீதியமைச்சர் ஹக்கீமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார் இதன்போதே  சூடான வார்த்தை பிரயோகங்கள் பரிமாறப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது .

குறித்த தொலைபேசி உரையாடலின் பின்னர் குற்ற புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரின் இல்லத்தில் சந்தித்து அஸாத் சாலி கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை விளக்கியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &