மத்தல விமான நிலையத்திலிருந்து 728 விமானங்களே இதுவரையில் பயணம் செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியினதும், இலங்கை வங்கியினதும் பொருளாதாரம் மறைப் பெறுமதியை எட்டியுள்ளது. ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 7500 மில்லியன் ரூபா பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி கோரப்படவில்லை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.