BREAKING NEWS

May 31, 2013

துறைமுக களஞ். தீ விபத்து 358 பேர் பாதிப்பு, 400 மில்லியன் நட்டம்

கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பொருட்சேதம் தொடர்பில் 358 பேரது தகவல்கள் கிடைத்துள்ளதாக துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர்களுடைய 400 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் தீ காரணமாக அழிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தீ விபத்து தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தீ பரவும் போது சீ.சீ.ரி.வி.கமராவில் பதிவான ஒளிப்பதிவுகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

எப்படியிருப்பினும் அரசின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &