BREAKING NEWS

Apr 28, 2013

IPL 2013 playoff இரு போட்டிகள் டில்லிக்கு மாற்றம்

சென்னையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த இந்தியன் பிறிமியர் லீக் தொடரின் பிளே ஓப் (playoff) சுற்றுக்கான இரு போட்டிகள் டில்லிக்கு மாற்றப்பட்டுள்ளன.

இலங்கை வீரர்கள் இந்தப்போட்டிகளில் விளையாடுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் ஐ.பி.எல் நிர்வாகத்தினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் அடுத்த மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த போட்டிகளே மாற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக ஏற்பட்ட அரசியல் அழுத்தங்களை அடுத்து சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக்கூடாது என தமிழக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் போட்டிகளில் இலங்கை வீரர்களின் பங்குபற்றல்களின்றியே அணிகள் போட்டிகளில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &