BREAKING NEWS

Apr 19, 2013

மோட்டார் வாகன பதிவு கட்டணம் அதிகரிக்கப் படவுள்ளது.


எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கபடுகின்றது. இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானியில் அறிவித்தல் விடுக்கப்பட்டும் இருப்பதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிச்சந்திர தெரிவித்தார்.
அத்துடன்  மோட்டார் வாகன பதிவு கட்டணத்தை அதிகரிக்க மாகாண ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2013 வரவு – செலவு திட்டத்தின்படி மோட்டார் வாகன ஆதாய பத்திர கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த கட்டண உயர்வு மேல் மாகாணத்தில் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக மேல் மாகாண போக்குவரத்து ஆணையாளர் சாந்த குமார முகந்திரம் தெரிவித்தார். நிதி அமைச்சின் ஆலோசனையின் கீழ் மேற்படி கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &