BREAKING NEWS

Apr 1, 2013

பிரேசிலில் ஓடும் பஸ்ஸில் காதலனின் கண் முன் பெண் மீது வல்லுறவு !

பிரேசில் நாட்டுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த பெண்ணொருவர் 

தனது காதலின் கண் முன்னர்  பஸ்ஸில் வைத்து வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அந்நாட்டில் ரியோ டீ ஜெனிரோவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஸ்ஸில் ஏறிய இருவர் மற்றைய பயணிகளை கீழே இறங்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.
அவர்கள் கீழே இறங்கியதும் பஸ்ஸினை வேறொரு இடத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த பெண்ணின் காதலனை மோசமாகத் தாக்கி அவருக்கு விலங்கிட்டுள்ளனர்.
பஸ்ஸை ஒருவர் செலுத்த மற்றையவர் அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.  இவ்வாறு மாறி மாறி இருவரும் அப்பெண்ணை பல தடவை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.
இதுமட்டுமன்றி அவர்களது கடனட்டை மற்றும் பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்.
இச்சம்பவத்தோடு தொடர்புபட்ட 2 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் பஸ்ஸை இவர்கள் வேறொரு இடத்திக்கு கொண்டு சென்றதாகவும் அங்கும் ஒருவர் இப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாகவும் அவரை பொலிஸார் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அவர்கள் இருவரையும் வேறொரு இடத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும் முறையே 20 மற்றும் 22 வயதானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் அங்கு பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &