இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு விசேட மார்க்கச் சொற்பொழிவு இஸ்லாமிய SRI LANKA DAWAH CENTER (SLDC) ஏற்பாட்டில் கட்டார் அல் பனார் கேட்போர் கூடத்தில் நேற்று (01-03-2013) வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது.
"பல்லின சமூகத்தில் முஸ்லிம் சிறுபான்மையினம்"
என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் இத்திரீஸ் ஹஸன் ஸஹவியும்
"ஈமானில் உறுதி வேண்டும்"
என்ற தலைப்பில் சவூதி அரேபியா இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் பிரதான அழைப்பாளர் அஷ்ஷெய்க் அஸ்ஹர் சீலானி ஆகியோ உரை நிகழ்த்துவதையும் கலந்து கொண்ட பெருந்தொகையான மக்களையும் படங்களில் காணலாம்.
















