BREAKING NEWS

Feb 22, 2013

கிடைத்த சந்தர்ப்ப த்தை நலுவ விடாதிர்கள் !!!

சிறிய அளவிலேனும் ஹலாலான உணவுப் பொருட்களையும் பண்டங்களையும் உற்பத்தி செய்வதில் முஸ்லிம்கள் ஆர்வம் காட்ட வேண்டும், இந்த நாட்டின் ஏற்றுமதிப் வர்த்தகம் , சுற்றுலாத்துறை என்பவற்றிற்கு ஹலாலான உற்பத்திகள் பெரும் பங்களிப்பை செய்கின்றன.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இன மத பேதமின்றி சகலருக்கும் வழங்கிய சான்றிதழை முஸ்லிம்களுக்குள் மாத்திரம் மட்டுப் படுத்திக் கொள்ளுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதால் ஏற்றுமதி வர்த்தகம் சுற்றுலாத்துறை உற்பட உள்நாட்டு சந்தைப் படுத்தலிலும் முஸ்லிம்களுக்கு அதிகரித்த சந்தர்ப்பங்கள் காணப் படுகின்றன.

ஜாம்மியதுல் உலமாவிடம் ஹலால் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களில் 85% விகிதத்திற்கு மேற்பட்டவை முஸ்லிம் அல்லாதோரின் நிறுவனங்களாகும் என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டும்.

எனவே எதிர்காலத்தில் அடுத்தவர்களால் வேண்டப் படாத உள்நாட்டு வெளி நாட்டு சந்தை வாய்ப்புக்களை முஸ்லிம்கள் சரிவரப் பயன் படுத்திக் கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் வெளிநாட்டுச் செலவாணி உழைப்பிற்கும் தேசப் பற்றுடன் கூடிய பங்களிப்பை செய்ய முடியும்.. இன்ஷா அல்லாஹ் .

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &