Aug 21, 2012
ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
Posted by AliffAlerts on 23:27 in NL | Comments : 0
மாத்தளை இரத்தோட்டை பிரதேசத்திலுள்ள ஆறு ஒன்றில் நீராட சென்ற 19 வயதுடைய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இரத்தோட்டை பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று மாலை இடம் பெற்றுள்ள இச் சம்பவத்தின் போது உயிரிழந்தவர் க.பொத. உயர்தர மாணவனாகிய எம்.ஆர். எம்.ரக்ஷான் என்பவராவார்.
அக்குறணை நீரெல்லை பிரதேசத்தை சேர்ந்த இம் மாணவனது பிரேத பரிசோதனை இன்று இரவு நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குறணை பிரதேசத்தில் இரு தினங்களுக்குள் நீரில் மூல்கி உயிரிழந்த இரண்டாவது இளைஞர் இவராவார்.