ஏக இறைவனின் திருப்பெயரால்.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட பயான் நிகழ்சி இன்ஷா அல்லாஹ் நவம்பர் 07 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைத் தொடர்ந்து 12.30 மணியளவில் தஃவா நிலைய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வில் அல் கப்ஜி தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் "மரணத்தை மறந்து வாழும் மனிதன்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
மேலும் இந்நிகழ்சி முடிவில் கேள்வி – பதில் இடம் பெற்று தகுந்த பரிசில்களும் வழங்கப்படும். ஆண், பெண் இரு பாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் பகல் போசனமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் அறிவித்தளை உங்கள் பகுதிகளில் முடியுமான அளவு வினியோகித்து தெரியப்படுத்துவதன் மூலமாக அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு சேவை செய்த நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
குறிப்பு: பெண்களுக்கு விஷேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழ் பேசும் உள்ளங்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தவராது கலந்து பயன்பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.