BREAKING NEWS

Jun 19, 2014

ACJUவின் நிலைப்பாட்டின் யதார்த்தம்

Source: இஸ்லாத்தை ஆராய்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளஹி வபரகாதுஹு.
நண்பர்களே....
நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். கவனமாக வாசிக்கவும்.

இலங்கையில் அளுத்கம/தர்காநகர் பிரச்சனை பற்றி உலகே அறிந்து அவமானப்படுகிறது.
இப்பிரச்சனையை "கலவரம்" என்று அழைக்க வேண்டாம். இதுவொரு திட்டமிட்ட இனரீதியான தாக்குதல் எண்று தான் அழைக்க வேண்டும் என்று சகோ. அஹமட் ஜம்ஷாத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். அது முற்றிலும் உண்மை என நானும் சாட்சி கூறுகிறேன்.
ஏனெனில், இதில் வலிந்து தாக்கியது சிங்களவர்களே தவிர முஸ்லிம்கள் அல்ல. தற்காப்புக்காக தான் முஸ்லிம்கள் அவ்வப்போது தாக்கினார்கள்.
எனவே இனிமேல் யாரும் இதை "கலவரம்" என்று அழைக்க வேண்டாம். 
கலவரம் என்றால் இரு குழுக்களும் தாக்கினால் தான் அது கலவரம். ஒரு குழு தாக்க மறுகுழு தற்பாதுகாத்தால் அது கலவரம் அல்ல.

இந்த பிரச்சனையில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா அமைப்பு முஸ்லிம்களிடம் வேண்டிக்கொண்ட விதத்தை சிலர், சில இயக்கங்கள் காரசாரமாக விமர்சிக்கின்றன. ஆனால் அதை தெளிவாக ஆராய வேண்டுமே தவிர ஆத்திரத்தில் வார்த்தையை பாவிக்க கூடாது.

குனூத் ஓதி துஆ செய்யுமாறும்,
வீடுகளில் பொறுமையாக இருக்குமாறும் கூறியது தான் இப்போது விமர்சனத்திற்கான தலைப்பு. ஆனால் அது தான் சரியென்று நானும் சொல்கிறேன். என் கருத்தை நிதானமாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கிழக்கு மாகாணம் முஸ்லிம்கள் மிகவும் செறிவாக வாழும் ஒரு பகுதியாகும். அங்கு இதுவரை பொதுபலசேனா கூட்டம் நடத்த முடியவில்லை. காரணம் அங்கு சிங்களவர்கள் போதியளவு இல்லை. அதையும் மீறி வழமை போன்று பஸ்களில் வயது போன முதியவர்களையும் பெண்களையும் சாப்பாட்டு பொதிகளையும் 500 ரூபா சம்பளமும் கொடுத்து கூட்டிக்கொண்டு போனாலும் திரும்பி வர முடியாது என்று தெரியும். ஞானசாரவின் கல்லறை கூட அடையாளம் தெரியாது போய்விடலாம். ஆனால், இலங்கையின் மற்ற பகுதிகளை தான் அவர்களும் குறி வைக்கிறார்கள். அதற்கு ஏற்ற் வாய்ப்பும் ஏராளமாகவே காணப்படுகிறது.

உதாரணமாக:
தர்காநகரம், அளுத்கமை, மாவனல்லை, பதுளை போன்ற ஊர்கள் தான் இந்த நாய்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளன. காரனம் அங்கு முஸ்லிம்கள் இருப்பதை போன்று சிஙளவர்களும் இருக்கிறார்கள்.
(பெரும்பான்மையான சிங்களவர்கள் இந்த பொதுபலசேனாவை ஆதரிக்கவில்லை. சில சுயநலவாதிகள் தான் இதில் இரையாகியுள்ளனர். இன்று காலை கூட ஒரு சிங்கள சகோதரர் என்னிடம், இந்த ஞானசாரவை கண்டபடி பேசிவிட்டு சென்றார்.)

கிழக்கு மாகாணம் தவிர்ந்த இலங்கையின் அனைத்து முஸ்லிம் ஊர்களும் 4 பக்கமும் சிங்கள ஊர்களால் சுற்றிவளைக்கப்பட்ட புவியியல் அமைப்பில் தான் உள்ளன. நான் மேலே சொன்ன எந்த ஊரை வேண்டுமானாலும் எடுத்துப்பாருங்கள். அத்தனையும் நடுவில் தான் உள்ளன.

எனவே, எம் மீதான தாக்குதல்களின் போது எமக்கு தற்பாதுகாப்புக்காக அவ்வப்போது ஒரு அட்டாக் கொடுக்கலாமே தவிர ஆயுதம் ஏந்தி "நாரே தக்பீர் அள்ளாஹு அக்பர்" என்று போராட முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

போர் என்று ஒன்று வந்துவிட்டால் அடிப்பது மட்டும் தான் என்று இல்லை. நன்றாக அடி வாங்கும் நிலையும் இருக்கும். ஏனெனில் இலங்கையில் நாம் 10% மட்டுமே.... அதுவும் பல லட்சங்கள் கிழக்கு மாகாணம் என்பதால் மற்ற பகுதிகளில் சராசரி வெறும் 4% அலலது 5% மட்டுமே...

இதன் கணிதவியல் அர்த்தம் என்னவெனில் 5 முஸ்லிம்கள் 80 சிங்களவர்களுடன் நேருக்கு நேர் சண்டை செய்வது போன்றது தான். எனவே கற்பனை செய்து பாருங்கள்.
இஸ்லாம் இது போன்ற ஒரு நிலையை எமக்கு கற்றுத்தரவில்லை. 
பத்ர் களம் 313க்கு 1000 என்ற நிலை. அதாவது ஒரு முஸ்லிம் 3 காபிர் என்ற நிலை தான் குறைந்தபட்ச பாதுகாப்பு போர். ஆனால் இங்கு...??? 1 முஸ்லிமுக்கு 16 காபிர் என்ற நிலை உருவாகிறது.
எனவே சிங்களவர்களை எதிர்த்து போர் நடத்துவது சுத்தமா........ன மடத்தனம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அஞ்சுவதும் அடிபணிவதும் அள்ளாஹ்வுக்கே என்பது போன்ற சில வசனங்களை சொல்லி மக்களை உசுப்பேற்ற வேண்டாம். ஏனெனில் அதே அள்ளாஹ் தான் அறிவை பாவித்து போராடுமாறு சொல்கிறான்.

இது போன்று மொக்கு வேலைகளை செய்வதற்கு அள்ளாஹ் வழி காட்டவில்லை.
அப்படியெனில் மக்காவில் வைத்தே நபி(ஸல்) அவர்களுக்கு போர் அனுமதியை வழங்கி இருப்பான். ஆனால் ஏன் வழங்கவில்லை என்று யோசிக்கவும்.

போர் ஆரம்பித்தால்,
முஸ்லிம் ஊர்களின் எல்லையில் உள்ள முஸ்லிம்கள் தான் தாக்கப்படுவார்கள். மானம் சொத்து என்று அனைத்தும் காலியாகிவிடும். அதன் பின்னர் சுற்றிவளைக்கப்படுவீர்.... பின்னர் என்ன??? ஜிஹாத் போராளிகள் சரணடந்தனர் என்று செய்தி வரும். அதைவிட அவமானம் வேறு என்னவாக இருக்கும்????

போரில் காயமடைந்தால்.....
******
அதற்கு தூக்கிக்கொண்டு ஓடுவது சிங்கள வைத்தியசாலைக்கு தானே....
அங்கு மருத்துவம் நடக்குமா???
எத்தனை முஸ்லிம் வைத்தியர்கள்....????? முஸ்லிம் தாதியர்கள் இருக்கிறர்கள்...?????
ஒரு கணக்கு போட்டு பாருங்களேன்.....!

பெண்கள் நிலை...
*******

முதல் கட்ட எழுச்சி போராட்டத்திலேயே பல்லாயிரக்கணக்கில் முஸ்ளிம் ஆண்கள் ஷஹீத் ஆகும் நிலை வரும்.
பெண்கள் தனிமையில் விடப்படுவர். அதன் பின்னர் பெண்களின் மானத்தை காப்பது எப்படி?????

கடந்த தர்காநகர் தாக்குதலிலும் இதன் ஒத்திகையை கண்டோம்.
ஆண்கள் அனைவரும் பள்ளியில் சிறைப்பட்ட நிலையில் பெண்கள் எல்லோரும் ஆங்காங்கு சீரழிந்தார்கள். ஆனால் அள்ளாஹ் எந்த பெண்ணின் மானத்தையும் போய் விடாமல் பாதுகாத்தான்.

இது பர்மாவை பின்பற்றிய பொதுபலசேனா நாய்கள் முன்னின்று நடந்தும் இனவாத தாக்குதல். அங்கு எப்படி முஸ்லிம் ஆண்களை மட்டும் கொலை செய்து பெண்களை அனுபவித்தார்களோ... அதை தான் இங்கும் செய்ய முனைவார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

இன்று பத்திரிகை செய்திகளில் நான் கண்டது....

* அனைத்து அரசியல் தலைமைகளும் இப்போது பொதுபலவுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். துவேஷ கட்சியான ஹெல உருமய கூட எதிர்க்கிறது.

* ரவுடி அரசியல்வாதியான மேர்வின் சில்வா கூட களத்தில் நேரடியாக முஸ்லிம்களின் பக்கம் நிற்கிறார்.

* பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்கள் ஏராளம் பேர் இந்த பொதுபலவுக்கு எதிராக வெறிபிடித்து திட்டுகிறார்கள்.

* ஜனாதிபதி கூட இதை தடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

* பொலிஸ் மா அதிபர் பொதுபலவுக்கு எதிராக கண்டபடி கொதிக்கிறார்.

* சிலர் குறை சொன்னாலும் முஸ்லிம் அமைச்சர்களும் தன்னாலான அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.

* புதிய ராணுவ அணி இனவாதிகளை கைது செய்து அடைத்து வைத்துள்ளது.

* ஞானசர தடுமாறுகிறான்... பிரச்சனையை நிறுத்துவதற்கு முயற்சிப்பதாக வாக்களிக்கிறான்...

* எல்லாவற்றிற்கும் மேலாக இதுவரை துஆ கேட்காத முஸ்லிம்களே இல்லை....

* அள்ளாஹ் பார்த்துக்கொண்டு இருக்கிறான்....

******
என்வே முஸ்லிம்களே...
எமக்கு எதிராக இந்த நாய்கள் ஏதாவது தாக்கினால் அதற்கு தற்காப்பு நடவடைக்கை செய்யவும்.
ஆனால் ஆத்திரத்தில் எந்த சிங்களவரையும் வலிந்து தாக்க வேண்டாம்.

மிகப்பெரும் ஆயுதமான "துஆவை" முடிந்தளவு பிரயோகிக்கவும். அதைத்தாண்டி இவர்களால் எதுவும் புடுங்க முடியாது....

அனைவர் கையிலும் செல்போன் உண்டு. எந்த நிகழ்வானாலும் உடனே வீடியோ, போட்டோ எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்யவும். உலகத்திற்கு உண்மையை சொல்லும் ஒரு ஊடகம் இப்போது பேஸ்புக் தவிர வேறு இல்லை.

பின்வரும் குர்'ஆன் வசனங்களை மனதில் வைத்துக்கொள்ளவும். பொறுமை தான் முக்கியம் என்று அள்ளாஹ் சொல்கிறான். இதன் அடிப்படியில் தான் உலமா சபை அறிவுரை கூறுகிறது. அவர்களுடன் எமக்குள்ள மனக்கசப்பை பிறகு தீர்க்கலாம். அமைதி திரும்பும் வரை பொறுமையுடன் இருக்கவும்.

2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

****
யாரும் ஆத்திரத்திலும் அவசரத்திலும் மக்களை உசுப்பேற்றிவிட்டு முஸ்லிம்களை இலஙையில் இருந்து முற்றாக அழித்துவிட வேண்டாம்.

எந்நேரமும் எதற்கும் தயாராகவே இருங்கள். எதிர்பார்க்காத நேரத்தில் கூட ஷஹீதாகும் வாய்ப்பு கிடைக்கலாம்.
தவ்பா செய்து பாவங்களை கழுவிக்கொண்டு தயாராகுங்கள்.

(தற்காப்பில் ஈடுபடுவது ஒவ்வொரு பிரஜையினதும் அடிப்படி உரிமை.)
முடிந்தளவு ஷெயார் செய்யவும்.
இந்த கட்டுரையையும் போட்டோவையும் உமது டைம்லைனில் போஸ்ட் செய்தால் இன்னும் நல்லது.

சொத்துக்களை முடிந்தளவு பாதுகாக்கும் ஏற்பாடுகளை செய்துகொள்ளவும்.
பணங்களை வங்கிகளில் வைப்பில் இடவும்.
முஸ்லிம் கடைகளை/வீடுகளை ஏதாவது ஒரு ரீதியில் அடையாளம் இடுவது போன்று தென்பட்டால் அந்த அடையாளத்தை நீக்கிவிட்டு, காவல் துறைக்கு அறிவிக்கவும்.
தீவிபத்துக்கு மாற்றீடாக தண்ணீர் கையிருப்பு இருக்க வேண்டும்.
தொலைபேசிகள் முடிந்தளவு சார்ஜ் செய்யப்பட்டு, ரிலோர்ட் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஜஸாக்கள்ளாஹ் கஹைர்.
வஸ்ஸலாம்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &