BREAKING NEWS

Apr 7, 2014

ரவூப் ஹக்கீம் மைதானத்துக்கு சென்று இலங்கை வீரர்களுக்கு வாழ்த்து



முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட்ட அதேவேளை, ஆட்டம் நிறைவடைந்ததும், நேரடியாக மைதானத்திற்கு சென்று இலங்கை அணி வீரர்களை வாழ்த்தியும் உள்ளார்.

அத்துடன் உலகக்கிண்ணத்துடன், சனத்ஜெய சூர்ய சகிதம் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

தேசத்தின் வெற்றியில் தேசியத் தலைவர்கள் .

1996 இல் நமது அணி உலகக் கோப்பையை வென்றபோது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் லாகூர் சென்று நமது வீரர்களுக்கு உற்சாகம் அளித்தார் .

இன்று 2014 வில் நமது அணி உலகக் கோப்பையை தனதாக்கிக் கொண்டபோது மு.கா தலைவர் ரவுப் ஹகீம் அவர்கள் டாக்கா சென்று நமது வீரர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார் .

( 1996 இல் லாகூர் போக ஹகீம் டிக்கட் பதிவு செய்திருந்த போதிலும் கடைசி நேரத்தில் அது எமது அன்பு வாப்பாவின் இறுதித்தினங்களாக இருந்ததினால் போகவில்லை )

முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேசத்தின் வெற்றியில் எப்போதும் பற்றுடனும் பாசத்துடனும் பங்குகொள்ளும் கட்சி .

தேசப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் இரத்தத்துடன் ஊறிப்போய் இருக்கிறது .

நமது தலைவர்கள் அதனை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் .
(SLMC. Rep.)

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &