தனியார் பேரூந்துகளில் சிரமமின்றி பயணம் செய்யும்
வகையில் முன்கூட்டியே பணம் செலுத்தக்கூடிய பயண அட்டைகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகளுக்கும்
நடாத்துனர்களுக்குமிடையில் ஏற்படும் மிகுதிப்பணத்துக்கான சிக்கல்கள் குறையும் என
எதிர்பார்ப்பதோடு மாகாண போக்குவரத்து சபைகளின் உதவியுடன் நாடளாவிய ரீதியில்
விரைவில் அமுலுக்கு வரும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ள.
எதிர்வரும் 21ம் திகதி முதல் வடமேல் மாகாணத்தில்
இத்திட்டம் அமுலுக்கு வரும் என தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி ரத்னாயக்க
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.