BREAKING NEWS

Nov 27, 2013

சவுதியில் வேலை பார்ப்பவர்கள். ஒரு முக்கிய அறிவித்தல்.


சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் வெளிநாட்டினர் தமது இகாமா எனப்படும் அனுமதி அட்டையை வெளியில் செல்லும் வேளைகளில் கொண்டு செல்வது கட்டாயம் ஆக்கபட்டுள்ளதாக அரப் நியுஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் குடிவரவு அதிகாரிகளால் சோதனை செய்யப்படும் போது தமது இகாமாவை வழங்க தவறும் ஒருவர் முதல் தடவை எனில் 1000 சவுதி ரியால்களையும், இரண்டாவது தடவை 2000 சவுதி ரியால்களையும், மூன்றவது தடவை 3000 சவுதி ரியால்களையும், அபராதமாக செலுத்த வேண்டி வரும் எனவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

அதேவேளை அனுமதியின்றி வேலை செய்து பிடிபடுவோர் சிறைத்தண்டனையுடன் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுபப்படுவர் எனவும்,
தமது இகாமவை இன்னொருவருக்கு வழங்கி உதவி செய்பவர்கள் உடனடியாக சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

iqamacheck.jpg

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &