ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசு ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானில் அவ்வாண்டுக்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருதை கடந்த 17 ஆண்டுகளாக வழங்கி வருகின்றது. இந்த வருடம் துபாய் அரசு வழங்கும் சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது இந்தியாவை சார்ந்த பிரபல இஸ்லாமிய பிராச்சாரகர் சாகிர் நாயக்குக்கு வழங்கப்பட்டது.
இதன்போது தனக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ஐக்கிய அரபு அமீரக திர்கத்தை (Dhs 1,000,000) தவ்வா பணியில் உள்ள பீஸ் டிவி க்கு நன்கொடையாக வக்பு செய்தார்.
