கொழும்பு, டி சொயிசா சுற்றுவட்டம், கன்னங்கர மாவத்தை, எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தை, தரமபால மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம் மீண்டும்
டி சொயிசா சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் ஒருவழி போக்குவரத்து ஒத்திகை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த ஒத்திகை இன்று சனிக்கிழமை காலை 6 மணி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.