BREAKING NEWS

May 10, 2013

சிறை தண்டனை ரத்து செய்யக் கோரும் சஞ்சய் தத்

 1993 Bombay Blasts Sc Consider Sanjay Dutt
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற இருக்கிறது.

மும்பையில் 1993ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பின்போது சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து. பின்னர் அந்த தண்டனை உச்சநீதிமன்றத்தில் 5 ஆண்டாக குறைக்கப்பட்டது.

இருப்பினும் ஒன்றரை ஆண்டுகள் ஏற்கனவே சிறையில் இருந்ததால் மூன்றரை ஆண்டுகாலம் சிறையில் இருக்க வேண்டும் என்றும் இதற்காக அவர் சரணடைய கால அவகாசமும் உச்சநீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டது.

இதனிடையே தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையையே ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை சஞ்சய் தத் தாக்கல் செய்திருந்தார். சஞ்சய்தத் தாக்கல் செய்த மனுவுடன் தண்டனை விதிகக்ப்பட்ட மேலும் 6 பேரின் மறு ஆய்வு மனுக்களும் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. 

English summary
The Supreme Court on Friday will take up Bollywood actor Sanjay Dutt's plea seeking review of its March 21 judgement upholding his conviction under the Arms Act and sentencing him to five years in jail in 1993 Bombay serial blasts case. A bench of P Sathasivam and BS Chauhan, which had delivered March 21 verdict, will take up the review plea in chamber.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &