BREAKING NEWS

May 24, 2013

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும்: ஜனாதிபதியிடம் கோரிக்கை!


13 ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைகளிடம் இருக்கின்ற நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தமிழ் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளரும் இலங்கைக்கான தமிழர்கள் அமைப்பை தோற்றுவித்தவருமான அருண் தம்பிமுத்துவே மேற்கண்டவாறு கோரியுள்ளார்.
மாகாண சபைகள் பற்றி மக்களின் கருத்தை அறிவதற்கே சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டும் என்று தான் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண சபை தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.
இலங்கையிலுள்ள தமிழ் மக்களில் ஒரு சிறுபகுதியினர் அதாவது 21 சதவீதமானவர்கள் மட்டுமே இருக்கின்ற யாழ்ப்பாணத்தின் மீது கவனம்செலுத்தப்படுகின்றது.
இதனால் நாட்டில் இதர பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகள் அலட்சியம் செய்யப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இலங்கை சனத்தொகையில் 15 சதவீதமாக உள்ள தமிழர் சமுதாயத்திற்கு அமைச்சரவையில் 15 சதவீத பிரதிநிதித்துவத்தை கோரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
சிங்கள,தமிழ் தீவிரவாதங்களை நிறுத்துவதற்கு இனவாத தடுப்பு சட்டங்களை கொண்டுவரவேண்மென கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அரசியல் கட்சிசாராத மூளைசாலிகள் குழுவை அமைக்கவேண்டுமெனவும் என்றும் அவர் கூறினார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &