நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற வருடத்திற்கான முதல் சூரிய கிரகணம் வெள்ளிக்கிழமை 10-05-2013 தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி அதிகாலை 2.05 தொடக்கம் காலை 8.55 வரையில் பார்க்க கூடியதாக இருக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பது ஆபத்தானது, எனவே பாதுகாப்பான வழிகளை கையாண்டு அதனை பார்க்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.