BREAKING NEWS

Apr 2, 2013

முஸ்லிம் களுக்கு எதிராக ஹர்தால் அனுஸ்டிக்க தமிழர்களுக்கு அழைப்பு.


மட்டக்களப்பு, தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக 04ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு ஆதி திராவிட சேனன் படையினால் துண்டுப்பிரசுரம் ஒன்று மட்டக்களப்பு நகர தமிழ் வர்த்தகர்களுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விழித்தெழுவீர், தமிழ் சிங்கள சமூகம், சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம் எனும் தலைப்பில் இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு:
(விழித்தெழுவீர் தமிழ் சிங்கள சமூகம். சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம்.)
1. மதி கெட்ட சோனகனே .சிந்திக்கா விட்டால் மாணவ சமூகத்தில் பிரிவினைகள் ஏற்படும் என்பதை எச்சரிக்கின்றோம்.
2. ஹலால் (அறாம்) ஹராம் இதன் எதிரொலி சகல உணவு வகையிலும் வந்தால் பாடசாலை சிறுவர்கள் உணவு பரிமாற்றம் செய்யும் போது (அறாம்) ஹராம்- ஹலால் வரும் அவ்வேளை அறியா பருவத்தில் இருக்கும் சிறு பிஞ்சு உள்ளம் படைத்த பாலர்கள் மனதில் உனது வைராக்கியம் பதியும் என்பதை எச்சரிக்கின்றோம்.
3. உனது சமூகத்தின் உணவுக்காக மிருக கழுத்தை அறுக்கும் நீ உழைப்புக்காக மனிதனின் கழுத்தை அறுக்காதே என எச்சரிக்கின்றோம்.
4. கிழக்கில் சோனக சமூகம் செய்த தமிழ் இன படுகொலையை இராணுவம் மீது சாட்டினாய். இனி இந்த சொறி வேட்டை பலிக்காது சீண்டினால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் தடுக்க முடியாது.உமது சமூகத்தின் இறைவன் அல்லாஹ்வே உன்னை தண்டிப்பார் என எச்சரிக்கின்றோம்.
கிழக்கில் இன உறவை உணவு, உடை ரீதியாக பிளவுகள் ஏற்படுத்துவதற்காக 25-03-2013 அன்று கடையடைப்பு செய்து தமிழ் சமூகத்தை விரோதியாக காட்டியதற்கும் தமிழ் சமூகம் சோனகர்களின் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்யாவிடின் சோனகர்களால் சம்பாதிக்க முடியாது என்பதையும் தெரிவிக்கும் முகமாகவும் எச்சரிக்கும் முகமாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள்,அரச திணைக்களங்கள் அனைத்தையும் 04-04-2012ம்த திகதி அன்று ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு அறை கூவலிடுகின்றோம்.
தன்மானமுள்ள அனைத்து தமிழனும் இதில் பங்காளி ஆக வேண்டும். ஆதி திராவிட சேனன் என்று அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &