BREAKING NEWS

Apr 2, 2013

மொழி பெயர்ப்பாளரின் காலில் விழுந்து வணக்கிய பிரதேசசபை உறுப்பினர்

பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளரை தாக்கிய குற்றச்சாட்டில் வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மாறவில மாவட்ட நீதிமன்றில் இன்று (02) முடிவுக்கு வந்தது. 

தாக்குதல் நடத்திய பிரதேசசபை உறுப்பினர் தாக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளரிடம் மாறவில மேலதிக நீதிபதி முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதை அடுத்து வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் டிசம்பவர் 9ஆம் திகதி வென்னப்புவ பிரதேசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பிரதேச சபை உறுப்பினர் பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் ஒருவரை தாக்கினார். 

தாக்குதலுக்குள்ளான மொழி பெயர்ப்பாளர் மாறவில ஆதார வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். 

சம்பவத்துடன் தொடர்புடைய தொடர்புடைய பிரதேசசபை உறுப்பினர் பொலிஸில் சரணடைந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 

குறித்த வழக்கு இன்று (02) விசாரணைக்கு வந்த போது பிரதேசசபை உறுப்பினர், மொழிபெயர்ப்பாளரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து வழக்கு முடிவுக்கு வந்தது. 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &