BREAKING NEWS

Mar 25, 2013

ஆலயத்தினுள் தாக்குதல்-மனித மலக்கழிவு வீச்சு..

மன்னார், சாவற்கட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் அந்தோனியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கூடு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டதோடு ஆலயத்தினுள் மனித மலக்கழிவு வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தின் உதவி பங்குத்தந்தை அருட்தந்தை அன்றன் தவராஜ் தெரிவித்தார். 

நேற்று (24) மாலை மழை பெய்து கொண்டிருந்த சமயம் ஆலயத்திற்குச் சென்ற இனம் தெரியாத நபர்கள் அந்தோனியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப்பெட்டிடை உடைத்ததோடு சில பொருட்களை இழுத்து கீழே வீசியுள்ளனர். 

ஆலயப் பகுதியினுள் மனித மலம் வீசப்பட்டு கிடந்துள்ளது. இந்த நிலையில் ஆலயத்திற்கு நேற்று மாலை வந்த மக்கள் குறித்த சம்பவத்தை கண்ட நிலையில் ஆலயத்தின் உதவி பங்குத்தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருப்பதாக மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தின் உதவி பங்குத்தந்தை அன்றன் தவராஜ் மேலும் தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &