ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என ஊடக துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அண்மையில் சிபாரிசு செய்தமை குறிப்பிடத்தக்கது.
