ஹலால் சான்றிதழ் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சர்கள் குழு இன்று பி.ப. 1:00 மணிக்கு அகில இலங்கை ஜம்இயதுள் உலமா பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.இந்த சந்திப்பு பாராளுமன்ற கட்டத் தொகுதியில் இடம்பெறவுள்ளது .
அதேவேளை நேற்று இடம்பெற்ற ஜம்இயதுல் உலமா ,முஸ்லிம் கவுன்சில் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திபு தொடர்பான ஜம்இயதுல் உலமாவின் உத்தியோக பூர்வ அறிக்கை இன்று வெளிவர இருப்பதால் அது தொடர்பான எமது செய்திகளை நாம் தவிர்த்து கொண்டுள்ளோம்.
