மைலோ கிண்ணத்துக்கான பாடசாலை மாணவர்களின் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் குருநாகல் மாவட்ட போட்டிகள் நாளை ஆரம்பமாகின்றன. குருநாகல் மாவட்ட பாடசாலைகளின் கால்பந்தாட்ட அணிகள் பங்குபற்றும் இப்போட்டித்தொடர் 4 வயதெல்லைகளின் அடிப்படையில் இடம்பெறுகின்மை குறிப்பிடத்தக்கது.நாளை பறகஹதெனிய தேசியப் பாடசாலை மற்றும் குருநாகல் மலியதேவ ஆண்கள் பாடசாலை என்பன மலியதேவ ஆண்கள் பாடசாலை மைதானத்தில் மோதவிருக்கின்றன.