BREAKING NEWS

Sep 11, 2012

பண்டாரகலையில் ஒருவர் தற்கொலை


இன்று   பிற்பகல் 1மணியளவில் பண்டாரகலை ஆற்றுக்கருகிலுள்ள மரமொன்றில் தூக்கிலிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சுமார் 50 வயதான இவர் சிங்ஹபுரயைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையென்பது குறிப்பிடத்தக்கது.

இந்திக்கவின் தந்தையென (பொல்கட்டு இந்திக்க) அனைவராலும் அழைக்கப்படும் இவர்  கடந்த சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தூக்கிலிட்டுக்கொண்டதற்கான காரணம் என்னவென்பது பற்றிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுக்கின்றன.


குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு எமது நிருபர்கள் சென்று வரும் வரை பொலிஸார் அவ்விடத்துக்கு வருகை தந்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &