BREAKING NEWS

Sep 2, 2012

போராட்டம் தொடர்கின்றது பேச்சுக்களில் பயனில்லை : ப.ஆ.ச.சம்மேளனம்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தி வருகின்ற பணிப்புறக்கணிப்புத் தொடர்பாக நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை ௭ன்று பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்கள் சம்மேளனம் தெரிவித்திருக்கின்றது. 

பல்கலைக் கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விடயங்களின் மூலம் தீர்வு காணப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆயினும் அதில் பல விடயங்கள் குறித்துத் தெளிவில்லை. கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவது தொடர்பில் காலவரையறை குறிப்பிடப்படவில்லை ௭ன்று பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்கள் சம்மேளனத்தின் பொருளாளர் பவித்ரா கைலாசபதி தெரிவித்துள்ளார். 

அதேவேளை, பல்கலைக் கழகங்களின் செயற்பாடுகளில் உள்ள அரசியல் தலையீடு உட்பட பல விடயங்கள் நீக்கப்பட்டு பல்கலைக் கழகங்கள் மீண்டும் சுதந்திரமாக செயற்படுவதற்கு வழிசமைக்கப்பட வேண்டும் ௭ன்ற கோரிக்கைக்கும் அரசிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். 

பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு தரப்படமாட்டாது ௭ன்று அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்திருப்பதாகத் தெரிவித்த பவித்ரா கைலாசபதி, பல்கலைக்கழக ஆசிரியர்களை விசேட பிரிவின் கீழ்க்கொண்டு வருவதன் மூலம் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் ௭ன்ற தமது யோசனை குறித்து அமைச்சரவைப் பத்திரத்தில் ௭துவுமே குறிப்பிடப்படவில்லை ௭ன்று சுட்டிக்காட்டினார். 

இந்த நிலையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையில் ௭ந்தவிதமான மாற்றமும் இல்லை ௭ன்றும் அதனை நாடளாவிய ரீதியில் மக்கள் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன ௭ன்றும் பவித்ரா கைலாசபதி தெரிவித்தார். இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல்கலைக் கழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை தாங்கள் உணர்ந்துள்ளபோதிலும், தமது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கின்ற அரசாங்கமும் அதில் பொறுப்பேற்க வேண்டும் ௭ன்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &