Aug 26, 2012
5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு 318416 மாணவர்கள்
Posted by AliffAlerts on 00:38 in NL NP | Comments : 0
இன்று ஆரம்பமாகும் 2012 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு நாடுமுழுவதிலும் உள்ள 318416 மாணவர்கள் 2803 பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுகின்றனர்.
இவர்களில் 77926 பேர் தமிழ் மொழி மூலமான மாணவர்கள் உள்ளடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை பறகஹதெனிய தேசியப் பாடசாலையிலிருந்து 143 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சைக்கு நீலம் அல்லது கருப்பு நிற பேனை அல்லது தடித்த முனை உள்ள பென்சிலை பாவிக்கும் படியும் பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் எமது நல் வாழத்ததுக்கள் உரித்தாகட்டும்