மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்…! கொழும்பில் கையெழுத்து வேட்டை
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி “இல்லை” என்போம் எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கை இடம்பெற்றது. இதில் பல்வேறுபட்ட மக்களும் கையெழுத்து இட்டனர்.